முல்லைத்தீவில் ஒருவர் கொரொனோவால் உயிரிழப்பு

முல்லைத்தீவு – வண்ணாங்குளத்தினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நகர் வண்ணாங்குளத்தினை சேர்ந்த 61 அகவையுடைய ஒருவரே கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 21 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது உடலம் மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.